ஐ.நா. பொதுச் சபையின் (UNGA-80) 80வது அமர்வு ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 09ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது.
80வது ஐக்கிய நாடுகள் சபையின் (UNGA) தலைவராக ஜெர்மனி நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், இந்தப் பதவியை ஏற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முதல் பெண்மணியாகவும், இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுள் ஐந்தாவது பெண்மணி என்ற பெருமையை இவர் பெற உள்ளார்.
இந்த ஐ.நா. பொதுச் சபைத் தலைவர் பதவி ஆனது ஆண்டுதோறும் ஐந்து பிராந்தியக் குழுக்களிடையே சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப் படுகிறது.