TNPSC Thervupettagam

82வது அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு

November 22 , 2021 1361 days 642 0
  • மாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லா நகரில் 82வது அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • ‘ஒரே நாடு, ஒரே சட்டமியற்றும் தளம்’ என்ற கருத்தினை மோடி அவர்கள் இதில் முன் வைத்தார்.
  • இந்தியாவில் உள்ள சட்டப் பேரவைகளின் உயர்நிலை அமைப்பான அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டு அமைப்பானது 2021 ஆம் ஆண்டில் தனது நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடுகிறது.
  • இதன் முதல் மாநாடானது  1921 ஆம் ஆண்டில் சிம்லா நகரில்  நடைபெற்றது.
  • சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சகோதரரான மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் வித்தல்பாய் படேல், 1925 ஆம் ஆண்டில் மத்தியச் சட்டப் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார்.
  • இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்காக இயற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதாவும் இந்த அவையில் தான் நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதாவானது 1925 ஆம் ஆண்டில் மோதி லால் நேரு அவர்களால் முன் மொழியப் பட்டு லாலா லஜபதி ராய் அவர்களால் வழி மொழியப் பட்டது.
  • இதில் மாநிலச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்காமல், அதைத் திரும்பி அனுப்புவதற்கான காரணங்களை ஏன் தெரிவிப்பதில்லை என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவர் M.அப்பாவு கேள்வி எழுப்பினார்.
  • சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருக்கும் (சில) ஆளுநர்களை சுட்டிக் காட்டி, எந்தவொரு மசோதாவின் மீதும் முடிவெடுப்பதற்கு ஒரு பிணைப்பு காலக்கெடுவை உருவாக்கவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்