பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உத்தரப் பிரதேசத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார்.
இந்த 9 கல்லூரிகள் சித்தார்த் நகர், இட்டாஹ், ஹர்தோய், ஃபதேபூர், பிரதாப்நகர், தியோரியா, காசிப்பூர், மிர்சாப்பூர் மற்றும் ஜான்பூர் ஆகிய இடங்களில் கட்டமைக்கப் பட்டுள்ளது.
இதில் எட்டு மருத்துவக் கல்லூரிகள் புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கான மத்திய அரசின் உதவி பெறும் திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஜான்பூரில் நிறுவப்பட்ட ஒரு கல்லூரியானது மாநில அரசினால் தனது சொந்த வளங்களைக் கொண்டு கட்டப்பட்டது.
மத்திய அரசின் இந்தத் திட்டமானது பின்னடைந்த மற்றும் உயர் லட்சிய மாவட்டங்களைத் தேர்ந்தெடுக்கிறது.
இத்திட்டமானது பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் பரவலில் உள்ள வேறுபாடுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.