TNPSC Thervupettagam

முத்தலாக் சட்ட வரலாறு

August 6 , 2019 2109 days 1457 0
  • 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று இந்திய உச்ச நீதிமன்றமானது, உடனடி முத்தலாக் (தலாக்-இ-பிதாத்) முறையை அரசியலமைப்பிற்கு முரணானது எனக் கூறி ஒரு சட்டத்தை இயற்றுவதன் மூலம் இந்த நடைமுறையை தடை செய்யுமாறு அரசைக் கேட்டுக் கொண்டது.
  • இதனால் இஸ்லாமிய பெண்கள் (திருமணம் தொடர்பான உரிமைகள் பாதுகாப்பு) அவசரச் சட்டமானது 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று குடியரசுத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டது.
  • 2019 ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதியுடன் இந்த அவசரச் சட்டம் காலாவதியாக இருந்த நிலையில் இதனை சட்டமாக மாற்றுவதற்காக 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் நாள் புதிய மசோதா ஒன்றை அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தியது.
  • இருப்பினும் இந்த மசோதா மாநிலங்களவையால் நிறைவேற்றப்படவில்லை.
  • மீண்டும் 2018 ஆம் ஆண்டின் அவசரச் சட்டம் காலாவதியாகும் முன்னரே அரசானது 2019 ஆம் ஆண்டு ஜனவரி 10 அன்று அதனை மறு பிரகடனம் செய்தது.
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று குடியரசுத் தலைவர் 2019 ஆம் ஆண்டின் முத்தலாக்  அவசரச் சட்டத்திற்கு மறு ஒப்புதல் அளித்தார்.
  • இந்த முத்தலாக் அவசரச் சட்டமானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று காலாவதியாவதாக இருந்தது.
  • எனவே, இச்சட்டத்திற்கான மசோதாவானது ஜூன் 25 அன்று மக்களவையிலும் பின்னர் ஜூலை 30 அன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது.
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 அன்று குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்தார். இந்தச் சட்டமானது 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் நாளிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
  • இந்த மசோதாவானது அரசியலமைப்பின் சரத்து 44-ன் (பொது சிவில் சட்டம்) கூறுகளுக்கு ஒத்ததாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்