TNPSC Thervupettagam
July 19 , 2025 16 hrs 0 min 27 0
  • மத்திய மின்துறை அமைச்சகம் ஆனது ₹1,000 கோடியில் தொழில்துறைகள் மற்றும் நிறுவனங்களில் ஆற்றல் திறன்மிகு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உதவுதல் (ADEETIE) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்த நிகழ்வு ஹரியானாவின் பானிபட்டில் தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) தூய்மையான மற்றும் ஆற்றல் திறன்மிகு தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதை ஆதரிக்கிறது.
  • ADEETIE திட்டமானது ஆற்றல் திறன்மிகு வாரியத்தால் (BEE) செயல்படுத்தப்படுகிறது.
  • இது நிதி மற்றும் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது என்பதோடு இதில் பின்வருவன அடங்கும்:
    • கடன்களுக்கான வட்டி மானியம்
    • முதலீட்டுத் தர ஆற்றல் தணிக்கைகள்
    • விரிவான திட்ட அறிக்கைகள் (DPRs) தயாரித்தல்
    • செயல்படுத்தலுக்குப் பிந்தைய கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்பு
  • இந்தத் திட்டம் முதல் கட்டத்தில் சுமார் 60 MSME தொகுப்புகளையும், 14 ஆற்றல் மிகு துறைகளை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்