தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான 16வது ASEAN பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம்-பிளஸ் (ADMM-பிளஸ்) நிபுணர்கள் பணிக்குழு புது டெல்லியில் நடைபெற்றது.
ADMM-பிளஸ் கட்டமைப்பின் கீழ் 16வது நிபுணர்கள் பணிக் குழுவிற்கு இந்தியாவும் மலேசியாவும் கூட்டாக தலைமை தாங்குகின்றன.
தீவிரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் நிபுணர்கள் பணிக்குழுக்களின் 2024–2027 ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டு கால சுழற்சியின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு உள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தீவிரவாத அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான தகவல் பகிர்வு, செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, திறன் மேம்பாடு மற்றும் சிறந்த நடைமுறைகள் ஆகியவை இதன் விவாதங்களில் அடங்கும்.
டேபிள் டாப் பயிற்சி திட்டமிடல் ஜனவரி 14, 2026 ஆம் தேதியன்று நடைபெற்றது.
மலேசியா 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தப் பயிற்சியை நடத்தும் என்பதோடு,இந்தியா 2027 ஆம் ஆண்டில் ஒரு களப் பயிற்சியை நடத்தும்.
கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம், அமைதிக் காப்பு, இராணுவ மருத்துவம், கண்ணிவெடி எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் இணையவெளிப் பாதுகாப்பு போன்ற துறைகளில் நடைமுறை பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான தளமாக ADMM-Plus செயல்படுகிறது.