TNPSC Thervupettagam

'Ageing with Dignity' நிகழ்ச்சி

May 6 , 2025 38 days 79 0
  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆனது, 'Ageing with Dignity- முதியோர்களின் நலனுக்கான முன்னெடுப்புகள்' நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தது.
  • இந்த நிகழ்வின் போது, ​​முதியோர்களின் நலனை நோக்கமாகக் கொண்ட பல முக்கிய முன்னெடுப்புகளை அது தொடங்கியது.
  • இந்த நிகழ்ச்சியில் முதியோர்கள் நல இணைய தளமும் தொடங்கப்பட்டது மேலும் முதியோர் இல்லங்களின் காணொளி வழி திறப்பு விழா, உதவி மற்றும் துணை சாதனங்கள் வழங்கல் ஆகியவையும் இந்த நிகழ்வில் இடம் பெற்றன.
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கும் பிரம்ம குமாரிகள் அமைப்புக்கும் இடையே தலைமுறைகளுக்கிடையிலான பிணைப்பு, முதியோர்களின் ஒட்டு மொத்த நல்வாழ்வு ஆகியவற்றிற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இது முதியோர், சமூக அமைப்புகள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆன்மீகத் தலைவர்களை ஒன்றிணைத்து முதியவர்களை மதித்து கௌரவிக்கும் இந்தியாவின் பாரம்பரிய நெறிமுறைகளை மீண்டும் உறுதிப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்