TNPSC Thervupettagam

AI உச்சி மாநாடு பிரகடன முடிவுகள்

February 25 , 2026 2 hrs 0 min 31 0
  • 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய AI தாக்க உச்சி மாநாட்டில், 88 நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் புது தில்லி AI உச்சி மாநாடு பிரகடனத்திற்கு ஒப்புதல் அளித்தன.
  • 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய AI தாக்க உச்சி மாநாடு, உள்கட்டமைப்பு முதலீட்டு உறுதிமொழிகளில் $250 பில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பெற்றது.
  • இந்த உச்சி மாநாட்டின் போது இந்திய நிறுவனங்கள் $300 பில்லியனுக்கும் அதிகமான ஒப்பந்தங்களை அறிவித்தது.
  • செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான புது தில்லி பிரகடனம், உறுதிமொழிகளை தன்னார்வ மற்றும் பிணைக்கும் தன்மை இல்லாதவை என்று விவரிக்கிறது.
  • புது தில்லி பிரகடனம் செயற்கை நுண்ணறிவின் (AI) ஜனநாயகப் பரவலை ஆதரிக்கிறது மற்றும் Global AI Impact Commons என்பதை, AI பயன்பாட்டு நிகழ்வுகளின் தரவுத் தளமாகவும், Trusted AI Commons என்பதைக் கருவிகள், அளவுகோல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளின் களஞ்சியமாகவும் முன்மொழிகிறது.
  • முன்னோடி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக $20 பில்லியன் உறுதியளிக்கப்பட்டது.
  • உள்நாட்டுச் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 10 லட்சம் கோடி முதலீட்டை அறிவித்துள்ளது.
  • இந்தியாவில் தரவு மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களில் அதன் $15 பில்லியன் முதலீட்டின் விவரங்களை கூகிள் பகிர்ந்து கொண்டது.
  • 100 மெகாவாட் தரவு மையத்தினைக் குத்தகைக்கு எடுக்க டாடா குழுமத்துடன் OpenAI  ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • செயற்கை நுண்ணறிவு (AI) ஒத்துழைப்புக்காக இன்போசிஸுடன் Anthropic நிறுவனம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • Nvidia கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளைப் பயன்படுத்தி தரவு மைய உள் கட்டமைப்பில் Yotta Data Services நிறுவனம் $2 பில்லியன் முதலீட்டை அறிவித்தது.
  • சர்வம் AI ஆனது இந்தியாவின் முதல் உள்நாட்டில் பயிற்சி பெற்ற பல பில்லியன் அளவுரு கொண்ட பெரிய மொழி மாதிரியை (LLM) அறிமுகப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்