உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆனது, மிகவும் சமீபத்தில் இயற்கை மறு சீரமைப்புக்காக என்று புதுமையான கண்காணிப்பு முறையினைத் துரிதப்படுத்துதல் (AIM4NatuRe) என்ற முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
இந்த முன்னெடுப்பிற்கு ஐக்கியப் பேரரசிடமிருந்து 7 மில்லியன் பிரிட்டன் பவுண்ட் நிதி உதவி வழங்கப்படுகிறது.
இது உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்பு முயற்சிகளின் கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் 30% தரமிழந்தச் சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பது என்ற குன்மிங்-மாண்ட்ரியல் உலகளாவிய பல்லுயிர்ப் பெருக்கக் கட்டமைப்பின் இரண்டாம் இலக்கினை அடைவதை இது ஆதரிக்கும்.