இந்தியா தனது இலட்சியமிகு மேம்படுத்தப் பட்ட நடுத்தரப் போர் விமான (AMCA) உற்பத்தித் திட்டத்திற்கு அனுமதியளித்துள்ளது என்பதோடு இது ஐந்தாம் தலைமுறை நுட்பம் சார்ந்த ரேடாருக்குப் புலப்படாத ஜெட் போர் விமான உற்பத்தித் திட்டமாகும்.
இந்த AMCA திட்டம் ஆனது இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் கீழ்வான்வழி மேம்பாட்டு நிறுவனம்(ADA - Aeronautical Development Agency அல்லது ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி) என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப் படுகிறது.
AMCA திட்டம் என்பது 25 டன் எடையுள்ள இரட்டை இயந்திர ரேடாருக்குப் புலப்படாத பல் செயல்பாட்டுப் போர் விமானமாகும் என்பதோடு இதில் அதிநவீன ரேடாருக்குப் புலப்படாத வடிவமைப்பு, உணர் கருவி இணைவு மற்றும் மேம்பட்ட வானியக்கவியல் அம்சங்கள் ஆகியவை அடங்கும்.
இந்தத் திட்டம் ஆனது இந்திய விமானப் படையை (IAF) அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற அடுத்தத் தலைமுறை நுட்பம் கொண்ட வான்வழிப் போர் அம்சங்கள் கொண்ட நாடுகளின் உயரடுக்குக் குழுவினுள் ஒன்றாக மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.