பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய இராணுவத்தின் பனிச்சறுக்குப் பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இப்பயணமானது இமாலய மலைத்தொடர் பகுதிகளில் நடத்தப்பட்டது.
ARMEX – 21 எனப்படும் இந்தப் பயணமானது மார்ச் 10 அன்று லடாக்கிலுள்ள காரகோரம் கணவாயில் கொடியசைத்துத் தொடங்கப்பட்டு 119 நாட்களில் 1,660 கி.மீ. தூரம் கடந்து ஜூலை 06 அன்று உத்தரகாண்ட்டிலுள்ள மலரியில் முடிவடைந்தது.
இந்திய நாட்டிலும் இந்திய இராணுவத்திலும் சாகச செயல்முறைகளை ஊக்குவிப்பதற்காக இமாலயப் பகுதியின்மலைத் தொடர்களில் ARMEX-21 பயணம் மேற்கொள்ளப்பட்டது.