இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) கல்வெட்டுப் பிரிவு ஆனது அனைத்து தமிழ் கல்வெட்டுகளையும் ஸ்கேன் செய்து எளிதாக அணுகுவதற்காக ஒரு பிரத்தியேக இயங்கலை களஞ்சியத்தில் பதிவேற்றுவதன் மூலம் டிஜிட்டல் மயமாக்கத் தொடங்கி உள்ளது.
ASI ஆனது 24,806 தமிழ் கல்வெட்டுப் படிகளைக் கொண்டுள்ளது என்பதோடுமேலும் 13,740 கல்வெட்டுகளுக்கான ஸ்கேன் செய்யும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன என்ற நிலையில்இப்பணியானது கிட்டத்தட்ட சுமார் 25,000 தமிழ்க் கல்வெட்டுகளையும் உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பிரிவானது அரபு மற்றும் பாரசீக மொழிகள் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளிலும் உள்ள கல்வெட்டுகளின் கல்வெட்டுப் படிகளையும் டிஜிட்டல் மயமாக்கி வருகிறது.
இந்தப் பணி பாரத் பகிரப்பட்ட கல்வெட்டுக் களஞ்சியத்தின் (BharatSHRI) ஒரு பகுதி ஆகும்.
BharatSHRI என்பது ஒரு டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகமாகும் என்பதோடுஇது பதிவு செய்யப் பட்ட அனைத்து கல்வெட்டுகளின் முழுமையான டிஜிட்டல் காப்பகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஸ்கேன் செய்யப்பட்ட கல்வெட்டுப் படிகளிலும் அதன் இருப்பிடம், மன்னர், வம்சம், மொழி, எழுத்து, காலம் மற்றும் எழுத்தாக்கம் ஆகியவற்றைக் குறிப்பிடும் விளக்கமான மாபெரும் தரவு உள்ளது.
இந்தத் திட்டம் அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கல்வெட்டுத் தரவை ஒரே டிஜிட்டல் தளம் மூலம் எளிதாக அணுக உதவுகிறது.