அடல் புத்தாக்கத் திட்ட அமைப்பானது ATL சார்த்தி என்ற முன்னெடுப்பினை அறிமுகப் படுத்தி உள்ளது.
இது அடல் மேம்பாட்டு ஆய்வகங்களின் (ATL) கீழ் பெருவளர்ச்சி பெற்று வரும் சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு விரிவான சுயக் கண்காணிப்புக் கட்டமைப்பு ஆகும்.
ATL சார்த்தி கட்டமைப்பானது, அடல் மேம்பாட்டு ஆய்வகங்களைத் திறனுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் செயல்பட உதவும் வகையில் ஒரு வழிகாட்டி போன்றதாகும்.
இதன் முதல் கட்டத்தில், அடல் புத்தாக்கத் திட்ட அமைப்பானது, அடல் மேம்பாட்டு ஆய்வகங்களை (ATLs) திறப்பதற்காக 10,000 பள்ளிகளுக்கு நிதியளித்துள்ளது.
நாடு முழுவதும் புதுமை மற்றும் தொழில்முனைவினை மேம்படுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டு நிதி ஆயோக் அமைப்பினால் அடல் புத்தாக்கத் திட்டமானது தொடங்கப் பட்டது.