Atoms4NetZero என்பது நாடுகள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கு அணுசக்தியைப் பயன்படுத்துவதை ஆதரிப்பதற்கான ஒரு உலகளாவிய முன்னெடுப்பு ஆகும்.
இது ஜனவரி 2025-இல் COP27 (ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாடு) நிகழ்வின் போது சர்வதேச அணுசக்தி முகமையால் (IAEA) தொடங்கப்பட்டது.
நாடுகள் தங்களின் தேசிய எரிசக்தித் தேவைகளில் தூய்மையான, நம்பகமான மற்றும் நிலையான மின் உற்பத்திக்காக அணுசக்தியை ஒருங்கிணைக்க உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது கார்பன் உமிழ்வைக் குறைத்தல், மின்சார உற்பத்தியில் கார்பன் பயன்பாட்டை நீக்குதல் மற்றும் அனைத்து துறைகளிலும் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
எரிசக்தி திட்டமிடலுக்காக MESSAGE (ஆற்றல் வழங்கல் உத்தி மாற்றுகளும் அவற்றின் பொதுவான சுற்றுச்சூழல் தாக்கங்களும் குறித்த மாதிரி) மற்றும் FRAMES (ஆற்றல் அமைப்புகளின் மாதிரியாக்கத்திற்கான கட்டமைப்பு) போன்ற மேம்பட்ட மென்பொருள் கருவிகளை இது பயன்படுத்துகிறது.
உலகளாவிய மின்சார உற்பத்தியில் சுமார் 10% மற்றும் குறைந்த கார்பன் மின்சார உற்பத்தியில் 25% அணுசக்தி மூலம் கிடைக்கிறது.