BIMSTEC நாடுகளின் வேளாண் நிபுணர்களின் 8வது சந்திப்பு
September 4 , 2021 1371 days 595 0
பல்துறைத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு அமைப்பின் (BIMSTEC) உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த வேளாண் நிபுணர்களின் 8வது சந்திப்பினை இந்தியா ஏற்பாடு செய்தது.
டாக்டர் திரிலோச்சன் மோஹபத்ரா இந்த சந்திப்பிற்குத் தலைமை தாங்கினார்.
இவர் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் செயலாளரும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் தலைமை இயக்குநரும் ஆவார்.
இச்சந்திப்பின்போது 2021 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் உணவுமுறை உச்சிமாநாடு பற்றியும் உலகளவில் வேளாண் மற்றும் உணவு முறையில் ஏற்பட்டு வரும் பரிமாற்ற அம்சங்கள் குறித்தும் இவர் எடுத்துரைத்து முன்னிலைப் படுத்தினார்.
BIMSTEC அமைப்பில் ஏழு உறுப்பினர் நாடுகள் உள்ளன. அவை,
தெற்காசியாவைச் சேர்ந்த 5 நாடுகள் (வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம், இலங்கை) மற்றும்
மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய இரு தென்கிழக்காசிய நாடுகள்.
BIMSTEC அமைப்பானது 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இந்த அமைப்பில் இதற்கு முன்பு 6 துறைகள் உள்ளடக்கப் பட்டிருந்தது.
இவை பின்பு 14 ஆக விரிவுப்படுத்தப்பட்டன (தொழில் நுட்பம், வர்த்தகம், ஆற்றல், வேளாண்மைபோன்றவை).