தமிழ்நாடு அரசானது, BNSS (பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா) 2023 சட்டத்தின் 218(2) பிரிவினை இந்த மாநிலத்தின் அனைத்து காவல்துறையினருக்கும் நீட்டிக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
இந்தப் பிரிவானது, பணியில் இருக்கும்போது செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்களுக்காக எந்தவொரு காவல்துறை அதிகாரி மீதும் வழக்குத் தொடருவதற்கு முன்பு அரசாங்கத்தின் அனுமதியைக் கோருகிறது.
இதே போன்ற காப்பு முன்னர் CrPC (குற்றவியல் நடைமுறைச் சட்டம்) சட்டத்தின் 197 ஆம் பிரிவின் கீழ் இருந்தது, ஆனால் பழைய நீட்டிப்பு உத்தரவுகள் குறித்து கண்டறிய முடியவில்லை.
பொது ஒழுங்கைப் பேணுவதில் ஈடுபட்டுள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்தக் காப்பு விதியைப் பயன்படுத்த, BNSS 2023 சட்டத்தின் 218(3) பிரிவின் கீழ் உள்ள அதிகாரங்களை அரசு பயன்படுத்தியது.
இந்தப் புதிய அறிவிப்பு ஆனது, 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழான தனியார் புகார்கள் அல்லது வழக்குகளுக்கான விதிகளை மாற்றவில்லை.