BRBNMPL நிறுவனத்தின் கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்
April 12 , 2022 1218 days 489 0
கர்நாடகாவின் மைசூரு நகரில் பாரதிய ரிசர்வ் வங்கிப் பண முத்ரன் நிறுவனத்தின் கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிறுவனமானது முழுவதும் இந்திய ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான அதன் ஒரு துணை நிறுவனமாகும்.
இந்தியப் பத்திர அச்சடிப்பு மற்றும் நாணயத் தயாரிப்புக் கழக நிறுவனம் மற்றும் இந்திய வங்கிப் பணத்தாள் ஆலை (தனியார்) நிறுவனம் ஆகியவற்றின் ஒரு தீவிர ஆதரவுடன் இந்தக் கற்றல் மற்றும் மேம்பாட்டு மையமானது நிறுவப்படுகிறது.