மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணய (CBDC) அடிப்படையிலான நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் தகுதியான பயனாளிகளுக்கு உணவு மானியப் பரிமாற்றங்களை வழங்கும் முதல் ஒன்றியப் பிரதேசங்களாக சண்டிகர் மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகியவை உருவெடுத்துள்ளன.
வழக்கமான வங்கிக் கணக்குகளுக்குப் பதிலாக பயனாளிகளின் டிஜிட்டல் ரூபாய் (e₹) வாலட்டுகளுக்கு நேரடியாக மானியம் மாற்றப்படும்.
திறன்பேசிகளில் விரைவு பதில் (QR) குறியீடுகள் மூலமாகவோ அல்லது சாதாரண அலைபேசிகளில் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (OTP) மூலமாகவோ பணப்பரிமாற்றங்களைச் செய்யலாம்.
இந்த முயற்சியானது மத்திய அரசின் நலத்திட்டத்தில் CBDC-யின் முதல் பெரிய அளவிலான பயன்பாடாகும், மேலும் இது குஜராத் மற்றும் புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைத் திட்டங்களைத் தொடர்ந்து வருகிறது.
CBDC (மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம்) என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) வெளியிடப் படும் இறையாண்மை கொண்ட டிஜிட்டல் நாணயமாகும்.
பிரதான் மந்திரி காரிப் கல்யாண் அன்ன யோஜனாவின் (PMGKAY) கீழ் உணவு மானிய விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை, கண்காணிப்பு மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.