64 நாடுகள் ஆனது உலகளாவியப் பசுமை இல்ல வாயு உமிழ்வில் 90 சதவீதத்திற்கும் அதிகமான உமிழ்விற்கு காரணமாக உள்ளன.
2025 ஆம் ஆண்டிற்கான பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீட்டில் 22 நாடுகள் மட்டுமே முன்னேற்றம் அடைந்துள்ள அதே நேரத்தில் 42 நாடுகள் பின்தங்கியுள்ளன.
இந்த ஆண்டு, இந்தக் குறியீட்டின் முதல் மூன்று இடங்கள் காலியாகவே உள்ளன.
2025 ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றத்தைத் தணிக்கச் செய்வதற்கான அனைத்து அளவுருக்கள் கொண்டு மதிப்பிடும் போது எந்த ஒரு நாடும் 'முதன்மை இடங்களில்' தரவரிசைப் படுத்தப்படவில்லை.
டென்மார்க் நாடானது இத்தர வரிசையில் அதன் முன்னணி (#4) இடத்தினைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அதைத் தொடர்ந்து நெதர்லாந்து, ஐக்கியப் பேரரசு, பிலிப்பைன்ஸ், மொராக்கோ, நார்வே மற்றும் இந்தியா (10வது இடம்) உள்ளன.
இதற்கு நேர்மாறாக, சீனா, அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பல நாடுகள் இத்தர வரிசையில் கடைசியாக உள்ளன.