தமிழக மாநில அரசானது ஏழு உறுப்பினர்களைக் கொண்ட சென்னை நகர நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையத்தினை (CCUDMA) அமைத்துள்ளது.
இது 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 41Aவது பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சிக் கழக ஆணையர் (GCC) அதன் அதிகாரப்பூர்வ/பதவி வழித் தலைவராக இருப்பார்.
சென்னை ஆட்சியர் இந்த CCUDMA ஆணையத்தின் பதவி வழித் துணைத் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
சென்னைப் பெருநகர காவல் ஆணையர், GCC துணை ஆணையர் (பணிகள்), GCC நகர சுகாதார அதிகாரி, சென்னைப் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் (CMDA) தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சென்னை பிராந்தியத்தின் நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் ஆகியோர் இந்தக் குழுவின் பதவி வழி உறுப்பினர்களாக இருப்பார்கள்.
சென்னைக்கான குழுவின் உருவாக்கமானது, 2024 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதாவினை தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இந்த மசோதாவானது, மாநிலத் தலைநகரங்களுக்கும், மாநகராட்சி கழகத்தினைக் கொண்ட அனைத்து நகரங்களுக்கும் (டெல்லி மற்றும் சண்டிகர் ஒன்றியப் பிரதேசம் தவிர) "தனி நகர்ப்புறப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தினை" உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.