அசாம் அரசானது, ஜப்பானில் மொழிப் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக முதலமைச்சரின் உலகளாவிய மனிதத் திறமைக்கான வெளிநாட்டு மொழிகள் முன்னெடுப்பினைத் (CM-FLIGHT) தொடங்கியது.
CM-FLIGHT அசாம் இளைஞர்களை ஜப்பானின் குறிப்பிட்ட திறமையான பணியாளர் (SSW) நுழைவு இசைவுச் சீட்டுத் திட்டத்துடன் இணைக்கிறது.
பயிற்சி, நோக்குநிலை மற்றும் ஆவணப்படுத்தலுக்காக ஓர் ஆர்வலருக்கு 1 லட்சம் ரூபாய் மானியத்தையும், இடமாற்றச் செலவுகளுக்காக கூடுதலாக 50,000 ரூபாய் மானியத்தையும் அசாம் அரசு வழங்குகிறது.
அசாம் அரசானது, பங்கேற்பின் அடிப்படையில் 1 லட்சமாக உயர வாய்ப்புள்ள 50,000 வேலை வாய்ப்புகளின் ஆரம்ப இலக்கைப் பெற்றுள்ளதுடன், இந்தியாவும் ஜப்பானும் 2030 ஆம் ஆண்டிற்குள் 5 லட்சம் இந்தியத் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க ஒப்புக் கொண்டுள்ளன.