TNPSC Thervupettagam

COP26 மாநாட்டில் இந்தியாவின் 5 உறுதிப்பாடுகள்

November 18 , 2021 1341 days 1092 0
  • பிரதமர் நரேந்திர மோடி, இந்திய நாட்டின் பருவநிலைச் செயல் திட்டமானது வகுக்கப் பட்டுள்ளதைக் குறிப்பிட்டு,  2070 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டி விடும் என்று  தெரிவித்தார்.
  • பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கு "மிகவும் கடினமாக" உழைத்து வரும் இந்தியா  ஐந்து உறுதிமொழிகள் அல்லது 'அமிர்த தத்வா' என்பதினைப் பூர்த்தி செய்யும் என பிரதமர் மோடி உலகிற்கு அறிவித்தார்.
  • உறுதிமொழி 1 - 2030 ஆம் ஆண்டுக்குள், இந்தியா தனது புதைபடிவம் சாராத எரிசக்தி திறனை 500 ஜிகா வாட்டாக உயர்த்தும்.
  • உறுதிமொழி 2 - 2030 ஆம் ஆண்டுக்குள், இந்தியா தனது ஆற்றல் தேவைகளில் 50 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யும்.
  • உறுதிமொழி  3 - இந்தியா தற்போதைய ஆண்டு  முதல் 2030 ஆண்டுக்கு  இடைப்பட்ட காலத்தில்  மொத்த கார்பன் உமிழ்வுகளில்  ஒரு பில்லியன் டன்கள் வரை குறைக்கும்.
  • உறுதிமொழி 4 - 2030 ஆம் ஆண்டுக்குள், இந்தியா தனது பொருளாதாரத்தில் நிலவும்  கார்பன் தீவிரத்தை 45 சதவீதத்திற்கும் கீழே குறைக்கும்.
  • உறுதிமொழி 5 - 2070 ஆம் ஆண்டுக்குள்  இந்தியா நிகர சுழிய  உமிழ்வு என்ற  இலக்கை அடையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்