இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகியவை சிறிய வளர்ந்து வரும் தீவு நாடுகளுடன் இணைந்து புதிய முன்னெடுப்பினைத் தொடங்க திட்டமிட்டுள்ளன.
இது “நெகிழ்திறனுடைய தீவு நாடுகளுக்கான உள்கட்டமைப்பு” என்று அழைக்கப் படுகிறது.
இது (COP 26) 26வது பங்குதாரர்கள் மாநாட்டின் பின்னணியில் தொடங்க உள்ளது.
இந்த முன்னெடுப்பானது தீவு நாடுகளில் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ளவும் பொருளாதார இழப்புகளை குறைக்கவும் வல்ல ஒரு உள்கட்டமைப்பினை உருவாக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.