வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஆனது CROPIC முன்னெடுப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
இது வேளாண் நிலங்களின் புகைப்படங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வகை அடிப்படையிலான மாதிரிகளைப் பயன்படுத்திப் பயிர்கள் மீதான பல தகவல்களைச் சேகரிப்பதற்கான ஓர் ஆய்வாகும்.
இந்த CROPIC என்பது பயிர்களின் நிகழ்நேரக் கண்காணிப்புகள் மற்றும் புகைப்படச் சேகரிப்பைக் குறிக்கிறது.
இப்பயிர்களானது அவற்றின் பயிரிடல் சுழற்சியின் போது, செயற்கை நுண்ணறிவின் மூலம் நான்கு-ஐந்து முறை என புகைப்படம் எடுக்கப்பட்டு, மேலும் அந்தப் பயிர்களின் ஆரோக்கியம் மற்றும் பருவகால இழப்புகளை நன்கு மதிப்பிடுவதற்கு வேண்டி இந்தப் புகைப்படங்கள் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவிற்காக (PMFBY) இந்த ஆய்வினை நடத்த அந்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.