ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) தனது 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வெளியிட்டது, இதில் மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) விசாரித்த 7,200க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் விசாரணை நிலுவையில் உள்ளதாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையச் சட்டம், 2003-இன் பிரிவு 14 இன் கீழ் இந்த அறிக்கை CVC-ஆல் தயாரிக்கப்பட்டு இந்தியக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப் படுகிறது.
குடியரசுத் தலைவர் இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்க ஏற்பாடுகளைச் செயல்படுத்துவார்.
CVC அமைப்பானது, மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு ஆணையச் சட்டம், 2003-இன் கீழ் இயங்குகிறது, இது அதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்குகிறது மற்றும் அதன் அதிகாரங்கள் மற்றும் பணிகளை வரையறுக்கிறது.
ஊழல் தடுப்புச் சட்டம், 1988-இன் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் CBI மீது CVC கண்காணிப்பு அதிகாரம் செலுத்துகிறது.
சந்தானம் குழுவின் பரிந்துரையின் பேரில் 1964 ஆம் ஆண்டில் CVC நிறுவப்பட்டது மற்றும் 2003 ஆம் ஆண்டில் சட்டப்பூர்வ அமைப்பாக மாறியது.
CBI தண்டனை விகிதம் 2024 ஆம் ஆண்டில் 69.14% இலிருந்து 2025 ஆம் ஆண்டில் 71.71% ஆக உயர்ந்துள்ளது.
CBI-இல் அனுமதிக்கப்பட்ட 7,300 பணியிடங்களில் 1,088 காலிப் பணியிடங்கள் இருந்தன.
ஊழல் தடுப்புச் சட்டம், 1988-இன் பிரிவு 17A, அரசு ஊழியர்களின் சில அதிகாரப்பூர்வ முடிவுகள் அல்லது பரிந்துரைகளை விசாரிப்பதற்கு முன் முன்அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயமாக்குகிறது.