D வாக்காளர்கள் – அஸ்ஸாம் தேசியக் குடிமக்கள் பதிவேடு குறித்த பிரச்சினைகள்
August 22 , 2019 2092 days 743 0
இறுதி தேசியக் குடிமக்கள் பதிவேடு வெளியிடுவதற்கு சில நாட்கள் இருக்கும் வேளையில், அப்பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டவர்களை D வாக்காளர்களாக அறிவிக்கப்பட வேண்டுமா என்ற சட்டப்பூர்வ பிரச்சனையை இந்தியத் தேர்தல் ஆணையம் தற்பொழுது எதிர் கொண்டுள்ளது.
நம்பத்தகாத அல்லது சந்தேகத்திற்கிடமான வாக்காளர்கள் என்று அழைக்கப்படுகின்ற D வாக்காளர்கள் அஸ்ஸாமில் உள்ள ஒரு வகையைச் சேர்ந்த வாக்காளர்கள் ஆவர். இவர்களின் குடியுரிமை சந்தேகத்திற்கிடமான அல்லது பிரச்சினைக்குரியதாக இருக்கின்றது.
இந்த வகையானது 1997 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்தகைய வாக்காளர்களின் வழக்கானது, அயல்நாட்டுத் தீர்ப்பாயத்தினால் முடிவு செய்யப்படும் வரை இவர்கள் தேர்தல்களில் பங்கேற்க முடியாது.
தற்பொழுது நிறைவு பெற்ற மக்களவைத் தேர்தலில் ஏறத்தாழ 1.2 இலட்ச D வாக்காளர்கள் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை.