TNPSC Thervupettagam
June 17 , 2020 1858 days 849 0
  • தில்லி துணை நிலை ஆளுநரான அனில் பைஜால் தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (DDMA - Delhi Disaster Management Authority) அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக ஒரு வல்லுநர் ஆலோசகக் குழுவை அமைத்துள்ளார்.
  • பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 என்ற சட்டமானது தேசிய, மாநில, மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விரிவான சட்டப்பூர்வச் செயல் திட்டங்களை வழங்குகின்றது.
  • மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையமானது மாநில முதலமைச்சரால் தலைமை தாங்கப் படுகின்றது.
  • ஆனால் தில்லியைப் பொறுத்தவரை, தில்லி துணைநிலை ஆளுநர் தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஆவார். தில்லியின் முதலமைச்சர் இந்த ஆணையத்தின் துணைத் தலைவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்