தமிழ்நாடு அரசானது அணைப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (DRIP – Dam Rehabilitation and Improvement Project) பணிகளை மேற்கொள்ள உலக வங்கியிடமிருந்து ரூ.1,064 கோடியிலான நிதியை எதிர்பார்க்கிறது.
இத்திட்டத்தின் நோக்கம் மாநிலத்தில் தற்பொழுதுள்ள அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதும் மாநிலத்தில் உள்ள அணைப் பாதுகாப்பிற்கான நிறுவன வழிமுறைகளானது அணைக் கட்டமைப்புகளை கையாள வலுவுடன் இருப்பதை உறுதி செய்வதும் ஆகும்.
தமிழ்நாடு பொதுப் பணித்துறை மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஆகியவை இணைந்து DRIP-ன் நிலை II மற்றும் நிலை III-ன் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 59 அணைகளைப் புனரமைப்பதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது.