TNPSC Thervupettagam
June 27 , 2025 5 days 58 0
  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமானது இந்திய அரிய ரத்தத் தானம் செய்பவர்கள் பதிவேட்டை (RDRI), e-Rakt Kosh எனும் தேசிய இரத்த வங்கி மேலாண்மை தளத்துடன் ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது.
  • e-Rakt Kosh ஆனது தேசிய சுகாதாரத் திட்டத்தின் (NHM) கீழ் உருவாக்கப்பட்டது.
  • இது இரத்த வங்கிகள், இரத்தம் கிடைக்கும் தன்மை மற்றும் இரத்த தான முகாம்கள் பற்றிய நிகழ்நேரத் தகவல்களை வழங்குகிறது.
  • இரத்தக் குழுவானது, மிகவும் இணக்கமான நன்கொடையாளர்களுக்கான அணுகலை எளிதாக்குவதன் மூலம் பாம்பே, Rh-null மற்றும் P-Null போன்ற சில அரிய இரத்த வகைகளைக் கொண்ட மக்களுக்குப் பயனளிப்பதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • RDRI  ஆனது இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையின் தேசிய குருதிக் கோளாறு சார்-தடுப்பாற்றலியல் நிறுவனம் (NIIH) மற்றும் நான்கு கூட்டு நிறுவனங்களால் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்