TNPSC Thervupettagam

e-Zero FIR முன்னெடுப்பு

May 24 , 2025 17 days 86 0
  • இந்திய இணையவெளிக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) ஆனது, டெல்லியில் ஒரு சோதனை /முன்னோடித் திட்டமாக புதிய e-Zero FIR என்ற முன்னெடுப்பினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது, 1930 உதவி எண் மூலமாக அல்லது cybercrime.gov.in என்ற வலை தளத்தில் பதிவு செய்யப்படும் நிதி சார் இணையவெளிக் குற்றப் புகார்களை தானாகவே முதல் தகவல் அறிக்கைகளாக (FIR) மாற்றும்.
  • தற்போது இது 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை சம்பந்தப்பட்ட நிதி சார் மோசடிகளுக்கும் பொருந்தும்.
  • இந்த அறிக்கைகள் உடனடியாக அந்தந்தப் பிராந்திய இணையவெளிக் குற்ற காவல் நிலையங்களுக்கு அனுப்பப்படும்.
  • பின் புகார்தாரர்கள் 3 நாட்களுக்குள் இணையவெளிக் குற்றக் காவல் நிலையத்திற்குச் சென்று, e-Zero FIR அறிக்கைகளை வழக்கமான FIR ஆக மாற்றலாம்.
  • டெல்லியின் e-Crime காவல் நிலையம் ஆனது e-FIR பதிவுக்கான மையமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்