இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) பதிவு நீக்கம் செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இடைக் காலத் தடை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த ஆறு ஆண்டுகளில் சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை ECI ரத்து செய்தது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகள் பதிவு நீக்க உத்தரவுகளை எதிர்த்து ரிட் மனுக்களை தாக்கல் செய்தன.
இடைக்காலத் தடை விதிப்பது என்பதுஅந்தக் கட்சிகள் வரவிருக்கும் தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் என்று நீதிமன்றம் கூறியது.
மனுதாரர்கள், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29A, அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு மட்டுமே வழங்குகிறது என்றும், பதிவை ரத்து செய்ய அல்ல என்றும் வாதிட்டனர்.
1897 ஆம் ஆண்டு பொது உட்பிரிவுகள் சட்டத்தின் பிரிவு 21 ஐ கட்சிகளின் பதிவை ரத்து செய்ய பயன்படுத்த முடியாது என்றும், இந்தியத் தேசிய காங்கிரஸ் Vs சமூக நல அமைப்பு (2002) வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சார்ந்திருப்பதாகவும் அவர்கள் வாதிட்டனர்.
2002 ஆம் ஆண்டு தீர்ப்பில், ஏமாற்றுதல், மோசடி அல்லது அரசியலமைப்பு மற்றும் சமதர்மம் மற்றும் மதச்சார்பின்மை போன்ற அதன் கொள்கைகளுக்கு விசுவாசம் இழத்தல் போன்ற தீவிர நிலைகளில் மட்டுமே பதிவை ரத்து செய்ய அனுமதிக்கப் படுகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 324 என்பதின் கீழ் வெளியிடப்பட்ட 2014 வழி காட்டுதல்களை ECI சார்ந்துள்ளது என்பதோடு கட்சிகள் ஆறு ஆண்டு காலத்திற்குள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இது கோருகிறது.