TNPSC Thervupettagam

ECI கட்சிகள் பதிவு ரத்து வழக்கு 2026

February 21 , 2026 2 days 25 0
  • இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) பதிவு நீக்கம் செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இடைக் காலத் தடை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
  • கடந்த ஆறு ஆண்டுகளில் சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை ECI ரத்து செய்தது.
  • தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகள் பதிவு நீக்க உத்தரவுகளை எதிர்த்து ரிட் மனுக்களை தாக்கல் செய்தன.
  • இடைக்காலத் தடை விதிப்பது என்பது அந்தக் கட்சிகள் வரவிருக்கும் தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் என்று நீதிமன்றம் கூறியது.
  • மனுதாரர்கள், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29A, அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு மட்டுமே வழங்குகிறது என்றும், பதிவை ரத்து செய்ய அல்ல என்றும் வாதிட்டனர்.
  • 1897 ஆம் ஆண்டு பொது உட்பிரிவுகள் சட்டத்தின் பிரிவு 21 ஐ கட்சிகளின் பதிவை ரத்து செய்ய பயன்படுத்த முடியாது என்றும், இந்தியத் தேசிய காங்கிரஸ் Vs சமூக நல அமைப்பு (2002) வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சார்ந்திருப்பதாகவும் அவர்கள் வாதிட்டனர்.
  • 2002 ஆம் ஆண்டு தீர்ப்பில், ஏமாற்றுதல், மோசடி அல்லது அரசியலமைப்பு மற்றும் சமதர்மம் மற்றும் மதச்சார்பின்மை போன்ற அதன் கொள்கைகளுக்கு விசுவாசம் இழத்தல் போன்ற தீவிர நிலைகளில் மட்டுமே பதிவை ரத்து செய்ய அனுமதிக்கப் படுகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
  • இந்திய அரசியலமைப்பின் பிரிவு 324 என்பதின் கீழ் வெளியிடப்பட்ட 2014 வழி காட்டுதல்களை ECI சார்ந்துள்ளது என்பதோடு கட்சிகள் ஆறு ஆண்டு காலத்திற்குள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இது கோருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்