January 4 , 2026
4 days
56
- மின்னணுக் கூறுகள் உற்பத்தி திட்டத்தின் (ECMS) மூன்றாம் கட்டத்தை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
- இந்தத் திட்டமானது 41,863 கோடி ரூபாய் மதிப்பிலான மொத்த நிதி ஒதுக்கீட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- ECMS ஆனது இந்தியாவில் உள்நாட்டு மின்னணுக் கூறு உற்பத்தியை வலுப்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- டாடா எலக்ட்ரானிக்ஸ், சாம்சங் டிஸ்ப்ளே, டிக்சன் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் BPL போன்ற முக்கிய நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ஒப்புதல்களைப் பெற்றுள்ளன.
- இந்தத் திட்டம் இறக்குமதி செய்யப்பட்ட மின்னணுக் கூறுகளை இந்தியா சார்ந்திருப்பதைக் குறைக்க முயல்கிறது.
- இது மின்னணுத் துறையில் முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஏற்றுமதி திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post Views:
56