மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரச் சமூகம் (ECOWAS) ஆனது அதன் 50 ஆம் ஆண்டு நிறைவை 2025 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதியன்று கொண்டாடியது.
லாகோஸ் என்ற ஒரு ஒப்பந்தமானது, 1975 ஆம் ஆண்டில் 15 மேற்கு ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களால் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தமானது அந்தப் பிராந்தியம் முழுவதும் பொருளாதார ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ECOWAS சமூகத்தினை நிறுவச் செய்வதற்கான அடித் தளத்தினை அமைத்தது.
ECOWAS என்பது 15 மேற்கு ஆப்பிரிக்க நாடுகளைக் கொண்ட ஒரு பிராந்தியக் குழு ஆகும்.
சமீபத்தில், நைஜர், மாலி மற்றும் புர்கினா பாசோ ஆகியவை இந்தக் குழுவிலிருந்து அதிகாரப் பூர்வமாக விலகின.
மொரிட்டானியா 2000 ஆம் ஆண்டில் இக்குழுவில் இருந்து விலகியது, ஆனால் 2017 ஆம் ஆண்டு மீண்டும் அதன் இணை உறுப்பினராக இணைந்தது.