TNPSC Thervupettagam
January 18 , 2020 2000 days 780 0
  • ELECRAMA 2020” என்ற நிகழ்ச்சியானது நொய்டாவில் நடத்தப்பட்டது.
  • இந்நிகழ்ச்சியானது இந்திய மின் தொழில் துறையின் புதுமைகளையும் சாதனைகளையும் எடுத்துக் காட்டுகின்றது.
  • “ELECRAMA” தளமானது இந்திய மின் மற்றும் மின்னணு உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் (IEEMA - Indian Electrical and Electronics Manufacturers’ Association) ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • இது மத்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம், மத்திய மின்சாரத் துறை அமைச்சகம், மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகம் போன்ற பிற அமைச்சகங்களினால் ஆதரிக்கப் படுகின்றது.

மின் தொழில் துறை பற்றி

  • இந்தியா மூன்றாவது மிகப்பெரிய மின்சார உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் நாடாக விளங்குகின்றது.
  • நாட்டின் தேசிய மின் தொடரானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப் படி, 368.79 ஜிகா வாட் திறன் கொண்டதாக உள்ளது.
  • நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின் ஆற்றலில் 41.16% மின் ஆற்றல் தொழில்துறை நோக்கங்களுக்காகவும் 24.76% மின் ஆற்றல் வீட்டு உபயோக நோக்கங்களுக்காகவும் 17.69% மின் ஆற்றல் விவசாய நோக்கங்களுக்காகவும் 8.24% மின் ஆற்றல் வணிக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப் படுகின்றது.
  • மொத்தமுள்ள 368.79 ஜிகா வாட்டில், தனியார் துறையின் மின் உற்பத்தியானது 46% ஆக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்