6 வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்களைக் கட்டமைப்பதற்கான இறுதி ஒப்புதலை இந்திய அரசு வழங்கியுள்ளது.
இது சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்திய விமானப் படையின் கண்காணிப்புத் திறனை அதிகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த விமானங்கள் நவீன போர் முறையில் வானிலுள்ள சக்தி வாய்ந்த கண்கள் எனக் கருதப் படுகின்றன.
இந்திய விமானப் படையானது தற்போது ரஷ்யாவின் IL-T6 என்ற போக்குவரத்து விமானத்தில் பொருத்தப்பட்ட 3 இஸ்ரேலிய பால்கன் AWACS அமைப்புகளை இயக்கி வருகிறது.
இந்திய விமானப் படையானது, பிரேசில் நாட்டின் சிறிய ரக விமானமான எம்பிரேரர்-145 என்ற ஜெட் விமானத்தின் மீது பொருத்தப்பட்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2 ‘நேத்ரா’ விமானங்களைக் கொண்டுள்ளது.