நிதித் துறை மதிப்பீட்டுத் திட்டம் (FSAP) என்பது 1999 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவற்றின் கூட்டு முன்னெடுப்பாகும்.
2047 ஆம் ஆண்டிற்குள் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய நிதித் துறை சீர்திருத்தங்களை துரிதப்படுத்துவதற்கு இந்த 2025 ஆம் அண்டு அறிக்கை இந்தியாவை வலியுறுத்தியது.
2017 ஆம் ஆண்டில் 144% ஆக இருந்த சொத்துக்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 175% ஆக உயர்ந்துள்ளதுடன் இந்தியாவின் நிதி அமைப்பு வலுவானதாகவும் பன்முகத் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆனது இந்தியாவில் அணுகல், செயல்திறன் மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்தியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் ஒழுங்குமுறை முன்னேற்றம் மேற்பார்வையை வலுப்படுத்தியுள்ளது என்றாலும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (NBFC) மேற்பார்வை சார்ந்த சவால்கள் உள்ளன.
பத்திரச் சந்தைகளை மேம்படுத்துதல், தனியார் மூலதனத்தைத் திரட்டுதல், NBFC ஒழுங்குமுறையை வலுப்படுத்துதல், டிஜிட்டல் சீர்திருத்தங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் பசுமை நிதியை நன்கு ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த அறிக்கையானது பரிந்துரைக்கிறது.