TNPSC Thervupettagam

FSSAI அமைப்பின் உணவுப் பாதுகாப்பு அறிக்கை

November 28 , 2019 2032 days 734 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (Food Safety and Standards Authority of India - FSSAI) விதிமுறைகளின் அமலாக்கம் குறித்த 2018-19 ஆம் ஆண்டிற்கான தரவை வெளியிட்டுள்ளது.
  • பாதுகாப்பற்ற, தரமற்ற மற்றும் பெயரிடல் குறைபாடுகள் ஆகியவற்றிற்காகத்  தனித்தனியாகத் தொகுக்கப்பட்ட தரவுகளை வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.
  • இதில் உத்தரகாண்ட், கோவா, பீகார், சிக்கிம், குஜராத் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பத்து மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்கள் சிறப்பாகச் செயல்பட்டன என அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இதில் நாகாலாந்து, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகியவை மிகவும் மோசமாகச் செயல்பட்ட பத்து மாநிலங்களின் வரிசையில் உள்ளன.

தமிழ்நாடு

  • தமிழ்நாட்டில் உள்ள உணவு மிகவும் பாதுகாப்பற்றது என்று FSSAI அறிக்கை கூறுகின்றது.
  • தமிழ்நாட்டில் 45% உணவு மாதிரிகள் தேவையான தரங்களைப் பூர்த்தி செய்யவில்லை.
  • தமிழ்நாட்டில் 12.7% உணவு மாதிரிகள் கலப்படம் செய்யப்பட்டுள்ளன மற்றும் நுகர்வுக்குப் பாதுகாப்பற்றவை என இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்