இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (Food Safety and Standards Authority of India - FSSAI) விதிமுறைகளின் அமலாக்கம் குறித்த 2018-19 ஆம் ஆண்டிற்கான தரவை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பற்ற, தரமற்ற மற்றும் பெயரிடல் குறைபாடுகள் ஆகியவற்றிற்காகத் தனித்தனியாகத் தொகுக்கப்பட்ட தரவுகளை வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.
இதில் உத்தரகாண்ட், கோவா, பீகார், சிக்கிம், குஜராத் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பத்து மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்கள் சிறப்பாகச் செயல்பட்டன என அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் நாகாலாந்து, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகியவை மிகவும் மோசமாகச் செயல்பட்ட பத்து மாநிலங்களின் வரிசையில் உள்ளன.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் உள்ள உணவு மிகவும் பாதுகாப்பற்றது என்று FSSAI அறிக்கை கூறுகின்றது.
தமிழ்நாட்டில் 45% உணவு மாதிரிகள் தேவையான தரங்களைப் பூர்த்தி செய்யவில்லை.
தமிழ்நாட்டில் 12.7% உணவு மாதிரிகள் கலப்படம் செய்யப்பட்டுள்ளன மற்றும் நுகர்வுக்குப் பாதுகாப்பற்றவை என இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.