தெலங்கானா சட்டப்பேரவையானது, தெலங்கானா தளம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் (பதிவு, சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்) மசோதா, 2026-ஐ நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதா விநியோகப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் போன்ற கிக் தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தளம்சார் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களைப் பதிவு செய்யவும், பணப் பரிமாற்ற விவரங்களைத் தொடர்ந்து சமர்ப்பிக்கவும் இந்தச் சட்டம் கட்டாயம் ஆக்குகிறது.
இதே போன்ற சட்டங்கள் ஏற்கனவே கர்நாடகா, ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன.