மத்திய நிதி அமைச்சகமானது புது டெல்லியில் சரக்கு மற்றும் சேவை வரி மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தினைத் (GSTAT) தொடங்கியுள்ளது.
GSTAT ஆனது தொழில்நுட்ப ஈடுபாடுகளற்ற முடிவுகள், எளிமைப்படுத்தப்பட்ட வடிவங்கள், டிஜிட்டல் முறையிலான வரித் தாக்கல்கள், மெய்நிகர் விசாரணைகள் மற்றும் வழக்கு கையாளுதலுக்கான கடுமையான காலக்கெடுவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பணப்புழக்கத்தை மேம்படுத்தவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர் நம்பிக்கையை அதிகரிக்கவும் சட்ட ரீதியான குறைபாடுகளைக் குறைக்கவும், செயல்முறைகளை எளிதாக்கவும், வழக்குத் தாமதங்களை நிவர்த்தி செய்யவும் இந்த தீர்ப்பாயம் முயலும்.
இயங்கலை வழி மேல்முறையீட்டுத் தாக்கல், வழக்கு கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் விசாரணைகளைச் செயல்படுத்துவதற்காக GSTAT இணைய நீதிமன்ற வலை தளம் வெளியிடப்பட்டது.