வேளாண் பொருட்கள் பிரிவில் இந்தியாவின் முதல் துறைசார் குறியீடான “GUAREX” என்ற குறியீடு தேசியப் பண்டக வகையீட்டுப் பரிமாற்ற நிறுவனத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட பிளவுபட்ட கொத்தவரை மற்றும் கொத்தவரை விதைகள் மீதான வருங்கால ஒப்பந்தங்களின் செயல்பாட்டினை நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்கும் ஒரு விலை அடிப்படையிலான குறியீடே GUAREX ஆகும்.
இந்தக் குறியீடானது மதிப்புத் தொடரில் பல வாய்ப்புகளை வழங்கும்.
இக்குறியீட்டில் சுத்திகரிக்கப்பட்ட பிளவுபடுத்தப்பட்ட கொத்தவரை மற்றும் கொத்த வரை விதைகளின் மதிப்பு முறையே 63% மற்றும் 37% ஆகும்.
இந்தியா உலகின் மிகப்பெரிய கொத்தவரை உற்பத்தி நாடாகும்.
ராஜஸ்தான் நாட்டின் முன்னணி கொத்தவரை உற்பத்தியாளராக திகழ்கிறது.