அதிபர் டொனால்ட் டிரம்ப் H-1B நுழைவு இசைவுச் சீட்டு விண்ணப்பக் கட்டணத்தை ஒரு நிறுவனத்திற்கு 100,000 டாலராக உயர்த்தியுள்ளார்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் போன்ற இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரலாற்று ரீதியாக அதிக H-1B நுழைவு இசைவுச் சீட்டுகளைப் பெற்றன.
சமீபத்தில், அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் கூகிள் போன்ற அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்களானது நுழைவு இசைவுச் சீட்டு நிதி ஆதரவில் (ஸ்பான்சர்ஷிப்பில்) முன்னிலை வகித்தன.
2024 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட H-1B நுழைவு இசைவுச் சீட்டு வைத்திருப்பவர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்தக் கட்டண உயர்வு ஆனது வெளிநாட்டுப் பணியமர்த்தலைக் குறைப்பதையும், அதிக திறமையான, அதிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டது.