ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலின் கீழ் ‘தீவிரவாத எதிர்ப்பு’ என்ற கருப் பொருளைக் கொண்ட 8வது இந்தியா - சீன கூட்டுப் பயிற்சியான ‘Hand-in-Hand 2019’ என்ற பயிற்சியானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 7 முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை மேகாலயாவின் உம்ரோய் நகரில் நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
மித நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள நிலப்பரப்பில் கூட்டுத் திட்டமிடல் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்வதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
2018 ஆம் ஆண்டில் இந்தப் பயிற்சியானது சீனாவில் உள்ள செங்டூ என்ற நகரில் நடத்தப் பட்டது.
இந்திய மற்றும் சீனத் துருப்புக்கள் ஆகியவற்றிற்கு இடையே டோக்லாமில் 72 நாட்கள் நீடித்த மோதலின் காரணமாக இந்தப் பயிற்சியானது 2017 ஆம் ஆண்டில் நடைபெற வில்லை.