TNPSC Thervupettagam

Hand-in-Hand பயிற்சி

December 5 , 2019 2012 days 748 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலின் கீழ் ‘தீவிரவாத எதிர்ப்பு’ என்ற கருப் பொருளைக் கொண்ட 8வது இந்தியா - சீன கூட்டுப் பயிற்சியான ‘Hand-in-Hand 2019’ என்ற பயிற்சியானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 7 முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை மேகாலயாவின் உம்ரோய் நகரில் நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.
  • மித நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள நிலப்பரப்பில் கூட்டுத் திட்டமிடல் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்வதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
  • 2018 ஆம் ஆண்டில் இந்தப் பயிற்சியானது சீனாவில் உள்ள செங்டூ என்ற நகரில் நடத்தப் பட்டது.
  • இந்திய மற்றும் சீனத் துருப்புக்கள் ஆகியவற்றிற்கு இடையே டோக்லாமில் 72 நாட்கள் நீடித்த மோதலின் காரணமாக இந்தப் பயிற்சியானது 2017 ஆம் ஆண்டில் நடைபெற வில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்