பாகிஸ்தான் மேற்கொண்ட ஆளில்லா விமானங்களின் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்திய இராணுவமானது சமீபத்திய இஸ்ரேலிய HAROP ஆளில்லா விமானங்களுடன் பாகிஸ்தானின் பல வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகளையும் குறி வைத்துத் தாக்கியது.
HAROP ஆளில்லா விமானங்கள் ஆனது, ஒரு வகை வான்வழிப் போர் விமானமாகும்.
அவை சுமந்து செல்லும் வெடி பொருளுடன், அதன் இலக்குகளைத் தாக்குவதன் மூலம் அழிவை ஏற்படுத்துகின்றன.
இதனால், அவை "தற்கொலை தாக்குதலில் ஈடுபடும் ஆளில்லா விமானங்கள்" மற்றும் "காமிகேஸ் ஆளில்லா விமானங்கள்" என்ற பெயர்களைப் பெற்றன.
அவை UAV (ஆளில்லா வான்வழி வாகனம்) மற்றும் ஒரு எறிகணையின் பண்புகளை ஒருங்கிணைந்துக் கொண்டுள்ளன.
போர்க்களத்திற்கு வெளியே உள்ள ஒரு தளத்தில் இருந்து ஏவப்படுகின்ற இந்த HAROP ஆளில்லா விமானங்கள் 200 கிலோ மீட்டர் வரை பறக்கும் திறன் கொண்டது.
இலக்கினைக் குறி வைத்துத் தாக்கும் ஆயுத அமைப்புகளாக, அவை எதிரி நாட்டின் பகுதிகளுக்கு மேலே பறந்து, அதன் இலக்கிற்கு என்று காத்திருந்து, பின்னர் அதனைத் தாக்குகின்றன.
அவை ஆளில்லா கடற்பரப்பு வாகனங்கள், கட்டுப்பாட்டு அமைப்புகள், விநியோக கிடங்குகள், பீரங்கிகள் மற்றும் வான் வழிப் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற உயர் மதிப்புள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடியது.