இந்தியாவின் மிகப்பெரிய ஒரு தனியார் துறை வங்கியான HDFC வங்கியினை HDFC கழகத்துடன் (வீட்டுவசதி மேம்பாட்டு நிதிக் கழகம்) இணைப்பதற்கு HDFC நிறுவனத்தின் இயக்குநர்கள் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தமானது வங்கியின் வீட்டு வசதிக் கடன் துறையினை உருவாக்கி, அதன் தற்போதைய நுகர்வோர் பரவலையும் மேம்படுத்தும்.
இதன் பின்பு HDFC வங்கியானது எந்த ஒரு அடையாளம் காணப்பட்ட ஊக்குவிப்புக் குழுமம் எதுவுமின்றி 100% என்ற அளவில் ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறும்.
இந்த இணைப்பு ஒப்பந்தத்திற்குப் பிறகு, HDFC லிமிடெட்டின் தற்போதைய பங்கு தாரர்கள் HDFC வங்கியில் 41% பங்குகளை வைத்திருப்பார்கள்.