பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு (ICDRI) குறித்த ஏழாவது சர்வதேச மாநாடானது பிரான்சின் நைஸ் நகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் கருப்பொருள் "Shaping a Resilient Future for Coastal Regions" என்பதாகும்.
இந்த மாநாடானது புது டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட பேரிடர் தாங்கும் உள் கட்டமைப்புக்கான கூட்டணியால் (CDRI) ஏற்பாடு செய்யப்பட்டது.
CDRI ஆனது இணைத் தலைமையாகக் கொண்டு, ஐரோப்பாவில் இந்த மாநாடு நடத்தப் படுவது இதுவே முதல் முறையாகும்.
2025 ஆம் ஆண்டு ICDRI ஆனது, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகம் (UNDRR) பேரிடர் அபாயக் குறைப்புக்கான உலகளாவிய தளம் (GPDRR) மற்றும் நைஸில் நடைபெற்ற மூன்றாவது ஐக்கிய நாடுகள் பெருங்கடல் மாநாடு (UNOC3) ஆகியவற்றுடன் ஒருங்கே நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது, இந்தியப் பிரதமர் அவர்கள் பேரிடர் நெகிழ் திறனை நன்கு வலுப்படுத்துவதற்கான 7 முக்கிய உலகளாவிய முன்னுரிமைகள், முன் எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கையின் தேவை ஆகியவற்றை நன்கு குறிப்பிட்டுக் காட்டினார்.