மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றத்தின் காரணமாக சர்வதேச எரிசக்தி முகமை (IEA) 400 மில்லியன் பீப்பாய்கள் அவசரகால எண்ணெயை வெளியிடும்.
உறுப்பு நாடுகளின் மூலோபாய இருப்புக்களில் இருந்து மேற்கொள்ளப்படும் இந்த வெளியீடு, IEA வரலாற்றிலேயே மிகப்பெரியதாகும்.
IEA உறுப்பு நாடுகள் 1.2 பில்லியன் பீப்பாய்கள் பொது அவசரகால எண்ணெயையும், அரசாங்க விதிகளின் கீழ் சுமார் 600 மில்லியன் பீப்பாய்கள் தொழில்துறை இருப்புக்களையும் கொண்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் பாரசீக வளைகுடாவில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் தங்களது இருப்பின் ஒரு பகுதியை வெளியிடும்.
பிராந்தியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை நிலைப்படுத்துவதை இந்த வெளியீடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்மஸ் நீர்ச்சந்தி பாதிக்கப் பட்டு உள்ளதால், எண்ணெய் போக்குவரத்து தடைபட்டுள்ளது.