ஹரியானாவின் குருகிராமில் உள்ள “தகவல் இணைவு மையம்-இந்தியப் பெருங்கடல் பிராந்தியம்” (Information Fusion Centre-Indian Ocean Region - IFC-IOR) மையத்தில் முதல் சர்வதேச தொடர்பு அதிகாரியாக ஒரு பிரெஞ்சுக் கடற்படை அதிகாரி நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல் பாதைகள் குறித்தத் தரவுகளை இந்த மையம் சேகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
உலகின் கடல் வர்த்தகத்தில் 75% மற்றும் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 50% ஆகியன இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வழியாக நடைபெறுகின்றது.
IFC-IOR ஆனது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப் பட்டது.