புது டெல்லியில் நடைபெற்ற 56வது சரக்கு மற்றும் சேவை வரி (GST) சபைக் கூட்டத்தில் தமிழ்நாடு பங்கேற்றது.
ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவை வரி (IGST) தீர்வு குறித்த அதிகாரிகள் குழுவின் அறிக்கையைச் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எடுத்துரைத்தார்.
2025 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத இறுதிக்குள் IGST தீர்வு அறிக்கையை முழுமையாக செயல்படுத்த GST சபை ஒப்புக் கொண்டது.
இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி முதல் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் (பாவ) பொருட்களுக்கு இழப்பீட்டு வீத வரி விதிக்கும் காலத்தை நீட்டிக்கவும் சபை பரிந்துரைத்துள்ளது.