பிரதமர் நரேந்திர அவர்கள் Infinity என்ற மன்றத்தினைத் தொடங்கி வைத்தார்.
இந்திய அரசின் கீழ், GIFT நகரம் மற்றும் புளூம்பெர்க் ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச நிதியியல் சேவை மையங்கள் ஆணையமானது இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.
முதலாவது மன்றத்தில் இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகியவை பங்குதார நாடுகள் ஆகும்.
இந்த மன்றமானது கொள்கை, வணிகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உலகின் முன்னணி நாடுகளின் சிந்தனைகளை ஒன்று சேர்க்கும்.
உள்ளார்ந்த வளர்ச்சிக்காகவும் மனித குலத்திற்குப் பெருமளவிலான சேவையை வழங்குதற்காகவும் வேண்டி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை எவ்வாறு நிதியியால் தொழில்நுட்பத் துறையில் பயன்படுத்தலாம் என்பது குறித்த செயல்மிக்க ஒரு நுண்ணறிவினைக் கொண்டு வருவதற்கும் அது பற்றி விவாதிக்கச் செய்வதற்கும் இம்மன்றம் வழி வகுக்கும்.